மீன்துறை சார் ஆய்வாளர்களுக்கான பணியிட அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதிவிற்க்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மீன்துறை சார் ஆய்வாளருக்காக காலியாக உள்ள 24 காலிப்பணியிடங்களுக்கும் நவம்பர் 11-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும், இப்பணிக்கு ஊதியமாக மாதம் ரூ.35,900 – 1,13,500 வழங்கப்படுகிறது. இதற்காக, மீன்பிடி தொழில்நுட்பம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியலை முக்கிய பாடமாகக் கொண்டு விலங்கியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மீன்வள அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான பதிவுக் கட்டணமாக 150 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 100 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை; சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை அறிவிப்பு