Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா ஏ.ஆர்.முருகதாஸ்? அடுத்தப்படம் இந்த ஸ்டாருடனா?

    மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா ஏ.ஆர்.முருகதாஸ்? அடுத்தப்படம் இந்த ஸ்டாருடனா?

    இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்துக்காக பிரபல நாயகனிடம் கதை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தீனா, ரமணா, கஜினி, 7-ம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர்ச்சியாக வெற்றித்திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸூக்கு கடைசியாக இயக்கிய ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

    இந்நிலையில், விஜயின் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸிற்கு பதிலாக நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனாலும் நெல்சன் இயக்கிய படமும் ரசிகர்களைக் கவரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்தப் படத்துக்காக சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    விஜய்க்காக அவர் எழுதிய கதையை தற்போது சிம்புவுக்கு ஏற்றார் போல மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு தற்போது பத்து தல என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும்,  இயக்குநர் சுதா கொங்கராவும் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....