Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்கள்...வெளிவந்த அறிவிப்பு

    ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்கள்…வெளிவந்த அறிவிப்பு

    தமிழ்நாடு ஊர்க்காவல் படை தமிழ்நாடு ஊர்க்காவல் படைப்பிரிவில் நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊர்க்காவல் படைப்பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக 55 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

    இந்த காலிப்பணியிடங்களில் 52 பணியிடங்கள் ஆண்களுக்காகவும், 3 பணியிடங்கள் பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறதாவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வயது தகுதியை பொறுத்தவரையில் 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும், நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுவர். 

    இப்பணிக்கு விண்ணப்பிக்க சேலம் மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகத்திற்கு சென்று தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இப்பணிக்கு விண்ணப்பிக்க 26.11.2022 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....