மாநிலம் முழுவதும் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோரையும் கிளப்புகள் நடத்துவோரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
“தமிழகத்தில் சட்ட விரோத மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை, மணல் கொள்ளை, கஞ்சா கடத்தல் மற்றும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது ஒன்றவி காவல்துறைக்கு மாமூல் தரக்கூடியதாக மாறிவிட்டது.
இவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர், “போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாநில முழுவதும் சட்டவிரோத சூதாட்ட கும்பல் அதிகரித்து வருவதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் சட்ட விரோதமாக செயல்படும் இழப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து விசாரிக்க உளவுத்துறை காவல்துறையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க.. மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை: விளக்கமளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்