ரஷ்யாவில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கை விரலை ரோபோ நசுக்கியது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் சிறுவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் ரோபோக்களுக்கு எதிராக சிறுவர்கள் போட்டியிடுவர்.
இந்நிலையில், சிறுவன் ஒருவன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருக்கும்போது, எதிரே விளையாடிய ரோபோ அந்தச் சிறுவனின் விரலை நசுக்கிவிட்டது. இதுகுறித்த காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் உலவிவருகிறது.
அந்தக் காணொளியில், ரோபோவுடன் சதுரங்கம் விளையாடுகிறான் சிறுவன். அப்போது, ரோபோவும் சிறுவனும் சரிவர தங்களது காய்களை நகர்த்தி விளையாடி வருகின்றனர்.
All acquisition that advanced AI will destroy humanity is false. Not the powerful AI or breaching laws of robotics will destroy humanity, but engineers with both left hands :/
On video – a chess robot breaks a kid’s finger at Moscow Chess Open today. pic.twitter.com/bIGIbHztar
— Pavel Osadchuk 👨💻💤 (@xakpc) July 21, 2022
இந்நிலையில், தீடிரென சிறுவன் காயை நகர்த்தி கை விரலை வைத்திருந்த இடத்திலேயே ரோபோவும் காயை வைக்கிறது. இச்சம்பவத்தில், அந்த 7 வயது சிறுவனின் கைவிரல் ரோபோவால் நசுக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வலியால் துடித்த அந்தச் சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து மாஸ்கோ சதுரங்க சம்மேளனம் கூறியதாவது :
ரோபோ, இதற்கு முன்பு நடைபெற்ற பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளது. ஆனால் இன்று ரோபோ அதன் நகர்வை முடிக்கும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக அந்த சிறுவன் நகர்தல் மேற்கொண்டான்.
மேலும், ரோபோக்கள் உடன் விளையாடுவதற்கென சில பாதுகாப்பு விதிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தச் சிறுவன் அந்த விதிகளை மீறிவிட்டான். ரோபோ காயை நகர்த்தியபோது, சிறுவன் அவனது நகர்வுக்காக காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு சதுரங்க சம்மேளனம் கூறியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு- இருவர் பலி