தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இனி ஆசிரியர்களின் வருகைப்பதிவை செயலியின் மூலம் கணக்கிடும் திட்டத்தைப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவானது செயலியின் மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின்படி, ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் காலை 10 மணிக்குள் வருகைப் பதிவேட்டுச் செயலியில் வருகையைப் பதிவு செய்யவில்லையெனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைக்கு வரும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் இயங்கிவரும் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மொத்தம் 77 வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.