Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

    பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்- பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

    தமிழகத்தில் இயங்கிவரும் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 77 வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி, 

    • பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டாலும், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் எது நடைபெற்றாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில்தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்.
    • பள்ளி தொடங்குவதற்கு முன்னதாகவே, தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.
    • பள்ளிகளில் குடிநீர், கழிவறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் போன்ற எதையும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது.
    • பள்ளகளுக்கு பேருந்தில் வரும் மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து  வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.
    • பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
    • பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வகுப்பறைக்கு வெளியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்தக் கூடாது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 
    • அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பார்க்க வேண்டும்.
    • மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து, படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    • ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். அலுவலர்கள் ஆய்வு செய்யும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பள்ளியில் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், பதிவேட்டில் எழுத வேண்டும். பள்ளிகள் – பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தலைமை ஆசிரியர் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் 

    மேற்கூறியவைகள் உள்பட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    மகளிர் உரிமைத்துறையில் காலிப்பணியிடங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....