திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களின் மகளான சரளா (வயது 17), திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி சரளா அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், மாணவி சரளா மர்மமான முறையில் விடுதி வளாகத்தில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்து விரைந்து சென்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை எனக் கூறி மாணவியின் உறவினர்கள், கீழச்சேரி பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு தற்போது, சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சதுரங்க ஆட்டத்தின் போது சிறுவனின் விரலை நசுக்கிய ரோபோ