பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக்ஸ்ட் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதைத் தொடர்ந்து, இளங்கலை பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கு ஜூலை 23-ம் தேதி வரை முதலில் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து, இளங்கலை பொறியியல் கல்லூரியின் 2-ம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இளங்கலை பொறியியல் கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர விருப்பமுள்ள தகுதியுடைய மாணவர்கள் www.tnlea.com , www.accet.co.in , www.accetedu.in போன்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் குறித்த சந்தேகங்களுக்கு, 04565-230801 மற்றும் 04565-224528 எண்களைத் தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.