அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் தீடிரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெக் பூங்காவில் கார் கண்காட்சி ஒன்று அரங்கேறிவந்தது. இந்தக் கண்காட்சியை கண்டுகளிக்க மக்கள் அதிக அளவில் அந்த பூங்காவில் கூடியிருந்தனர்.
இந்நிலையில், அங்கு கூடியிருந்த மக்களின் மீது தீடிரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதுபற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது:
லாஸ் ஏஞ்சல்ஸின் சான் பெட்ரோ பகுதியருகே உள்ள பெக் பூங்காவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. கடந்த 24-ம் தேதி மாலை 4 மணிக்கு முன்னதாக நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர். இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலின் போதே இச்சம்பவம் நடைபெற்றது. பொது பாதுகாப்புக்கு தற்போது எந்தவித இடையூறும் இல்லை.
இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸில் துப்பாக்கிச்சூடு- மூன்று பேர் பலி