இலங்கையில் ஊரடங்கு 13 தேதி வரை நீடிக்கப்பட்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இலங்கை இராணுவம் நாட்டின் பல பகுதிகளில் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதரா நெருக்கடி நிலவி வருவதால் ராஜபக்சே குடும்பம் வேண்டாம் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்த்தனர்.
வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. ராஜாபக்சேக்கள் இல்லாத அமைச்சரவை உருவாக்கப்படும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருந்தார்.
பிரதமர் இல்லாத அமைச்சரவை தற்போது நீடிக்கும் நிலையில், புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் ரணில் விக்ரம சிங்க-வும் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர். குறுகிய காலத்திற்கேனும் பிரதமர் பதவியில் இருக்குமாறு கோத்தபய ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் ரணில் விக்ரம சிங்க இதற்கு சம்மதித்து, இன்று மாலை அல்லது நாளை பதவி ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில், பெருபான்மையுடன் பிரதமர் பதவியை ரணில் விக்ரம சிங்க ஏற்பார் என கூறப்படுகிறது. புதிதாக அமைக்கப்படும் அமைச்சரவையில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் அரசியல் சாசன சீர்திருத்த மாற்றங்களை கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போராடும் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இலங்கையின் பொருளாதார நிலை மேம்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சக்தி: 24 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா நிகழ்த்திய அளப்பரிய சாதனை!