Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்சிவபெருமானை வீட்டில் வழிபட இப்படியெல்லாம் செய்யுங்கள்; பலன்கள் குவியும்!

    சிவபெருமானை வீட்டில் வழிபட இப்படியெல்லாம் செய்யுங்கள்; பலன்கள் குவியும்!

    இந்து மதத்தின் மிக முக்கிய கடவுளான சிவபெருமானைப் பற்றி நாம் நன்கு அறிவோம். மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் ருத்ர மூர்த்தி ஆவார். ஏனெனில் அவரின் கோபம் பற்றி அனைவரும் நாம் அறிவோம். அழிக்கும் கடவுளான சிவபெருமான் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்குபவர்.

    அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான்.

    கோவிலுக்கு சென்று கூட்டத்துடன் கூட்டமாக கடவுளை வணங்குவதை விட வீட்டு கோவிலில் உள்ளம் உருக நீங்கள் முறையாக பூஜைகள் செய்து வழிபடும் போது அது உங்களுக்கு அதிக பலனையும், மனஅமைதியையும் தரும்.

    அவ்வாறு கடவுளை வீட்டில் வைத்து வழிபடும்போது சில முக்கியமான தகல்களை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பதிவில் வீட்டில் கடவுளை வழிபடும் போது என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

    சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது. அதனை பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்:

    வில்வ இலைகள்:

    சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்றால் அது இந்த முக்கோண வடிவ இலைதான். வில்வ இலைகள் இல்லாமல் செய்யப்படும் சிவ வழிபாடு என்பது பயனற்றது என்று சிவபுராணம் கூறுகிறது. இந்த வில்வ மரம் பிரம்மாவால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மரத்தை லட்சுமியின் வலதுக் கரத்தில் இருந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    சர்க்கரை:

    சர்க்கரை உங்களுக்கு வேண்டுமானால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தலாம். ஆனால் ஈசனுக்கோ சர்க்கரை என்றால் கொள்ளைப்பிரியம். சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் நடக்கும்போதோ அல்லது சிவராத்திரி பூஜையின் போதோ சர்க்கரையை வைத்து வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள வறுமை பனி போல விலகுவது நிச்சயம்.

    தயிர் :

    தயிர் என்பது அனைத்து கடவுளுக்கும் படைக்கப்படும் ஒரு முக்கிய பொருளாகும். ஆனால் சிவபெருமானுக்கு தயிர் வைத்து வழிபடுவதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் இது உங்களுக்கு வாழ்வில் அமைதியையும், பொறுப்பையும் வழங்கும் அதுமட்டுமின்றி துரதிர்ஷ்டத்தை உங்கள் வாழ்க்கையை விட்டு துரத்தும்.

    ரோஜா:

    சிவபெருமானை ரோஜா மலர்களை கொண்டு வழிபடுவது, பத்து குதிரைகளை கொண்ட யாகத்தை செய்வதற்கு சமம் என்று புராணம் கூறுகிறது. எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.

    பசுநெய்:

    சிவபெருமானை நெய்யை வைத்து வழிபடும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிவனுக்கு சுத்தமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வைத்து மட்டுமே வழிபடவேண்டும். உங்களுக்கு ஈசனின் அருளால் வாழ்வில் வெற்றியும், வலிமையும் வேண்டுமெனில் இதனை செய்யுங்கள்.

    தாமரை பூ:

    சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம். வெள்ளை, பிங்க், நீலம் என பல மலர்களில் தாமரை இருக்கிறது. சிவபெருமானுக்கு வழிபடுவதற்கு நீல தாமரை மிகவும் உகந்ததாகும்.

    தேன்:

    இயற்கையின் மிகவும் தூய்மையான படைப்புகளில் ஒன்று தேன். எனவே இது சிவபெருமானுக்கு படைக்க ஏற்ற ஒன்றாகும். தேனை வைத்து வழிபடுவது ஒருவரின் குணத்தை நல்லதாக மாற்றுவதோடு அவர்கள் வாழ்வில் இனிமையையும் சேர்க்கும்.

    அரளி பூ:

    சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம். வெள்ளை அரளி மலரை வைத்து சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு அழகான மனைவி கிடைப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....