பொதுவாக பலருக்கும் கனவுகள் வருவது சாதரணமான விஷயம். அதே சமயம் கனவுகள் பலிக்குமா? பலிக்காதா? என்று கேள்விகள் இருக்கும். பகல் நேரங்களில் காணும் கனவுகள் பலிக்காது. அதிகாலை காணும் கனவுகள் பலிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் வித்தியாசனமான கனவுகள் வருகின்றன.
அதில் அதிகம் நாம் கேள்விபடும் கனவுகளில் ஒன்று இறந்தவர்கள் கனவில் வந்தார்கள் என்பது தான். இருக்கின்ற அல்லது இல்லாத பொருளோ மனிதரோ கனவுகளில் வருவது உண்டு. இறந்த நபர் கனவில் வருவதால் என்ன நடக்கும்? அதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது தெரியுமா?
இறந்தவர்களை நமது கனவில் கண்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
- இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்திகள் வந்து சேரும் என்பது பொருள். பொதுவாக இறந்தவர்கள் கனவில் தோன்றி உங்களை ஆசிர்வதித்தால் அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும் என்றும் பொருள் கொள்ளலாம்.
- நீங்கள் இறந்தவர்களுடன் உணவு சாப்பிடுவது போன்று கனவு கண்டால் புகழும் பெருமையும் உங்களைத் தேடி வரும்.
- இறந்து போனர்வகள் உங்கள் வீட்டில் வந்து உறங்குவது போன்று கனவு கண்டால், மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பி பிழைப்பீர்கள் என்று அர்த்தம்.
- இறந்தவர்கள் உங்களிடம் வந்து ஏதாவது பேச முற்பட்டால் அவர்கள், வேறு யாரவது ஒருவரின் மூலமாக உங்களுக்கு உதவ நினைக்கிறார்கள் என்பது பொருள்.
- நாம் இறந்துவிட்டது போன்றும் நமக்காக பலர் அழுவது போன்றும் கனவு கண்டால் நமது ஆயுள் காலம் கூடும்.
- இறந்துபோன உங்கள் தாய் கனவில் வந்தால், உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள யாரோ ஒரு பெண்ணிற்கு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
- இறந்துபோன உங்கள் தந்தை கனவில் வந்தால், இதுவரை நீங்கள் தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்து வெற்றி காணுவீர்கள்.
- நமக்கு வேண்டப்பட்ட அல்லது முக்கிய நபர் இறந்தது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என பொருள் கொள்ளலாம்.
- இறந்தவர்கள் கனவில் வந்து அழுவது போன்று தோன்றினால், அது உங்களுக்கு நன்மை அளிக்காது; குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
- இறந்துபோன தாயும் தந்தையும் சேர்ந்து கனவில் வந்தால், ஆபத்தை சுட்டிக்காட்ட வந்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
- சவப்பெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருக்கமானவர்கள் அல்லது உறவினர்கள் யாரோ இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
வைகுண்ட ஏகாதசி: ஒரே நாளில் கோடிக்கணக்கில் காணிக்கை பெற்ற திருப்பதி