கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு வருவதற்கு, பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா போன்ற ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கு நீரிழிவு வருவதற்கு வாய்ப்பு மிக அதிகம்.
சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடம் இந்தியா என உலக சுகாதார மையம் அச்சுறுத்தியும் இந்தியர்களிடையே, நீரிழிவு குறித்த விழிப்புணர்வு, போதிய அளவு இல்லை என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.
நீரிழிவு என்பது உடலின் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இயலாமையால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நிலை. இது பல காரணிகளால் இருக்கலாம். அவை சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் ஏற்படலாம்.
நீரிழிவு நோய் பரவுவது பாலின சார்புடையது அல்ல என்று பெரும்பாலும் கூறப்படுகிறது. இருப்பினும், பல ஆய்வுகள் பெண்களுடன் ஆண்களை ஒப்பிடும்போது நீரிழிவு நோய்/சர்க்கரை நோய் ஆண்களுக்கே அதிகம் என்று கூறுகின்றன.
சர்க்கரை நோய் எவ்வாறு வருகிறது?
நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை. இந்த ஹார்மோனை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பு இயல்பாக இருக்கும் வரை, உணவில் உள்ள சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை இருக்காது.
இன்சுலின் சுரப்பு குறைவாக இருந்தாலோ அல்லது இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டாலோ சர்க்கரை சத்தை ஆற்றலாக மாற்றுவதில் பிரச்சனை ஏற்படும். விளைவு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருகிறது.
வகைகள்:
டைப் 1 சர்க்கரை குறைபாடு:
சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.
டைப் 2 சர்க்கரை குறைபாடு :
பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.
நீரிழிவு நோய் என்பது ஒரு நோயே அல்ல. அது ஒரு குறைபாடுதான். ஆரம்பத்திலேய சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழிகள் உள்ளன.
சிறுநீர் கழித்தல்:
அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் நீரிழிவுக்கான அறிகுறிகள் தான். மேலும், சிறுநீர் வெளியாகும் இடத்தில் அரிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
உடலில் உள்ள சர்க்கரையை வெளியேற்றும் முயற்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அடிக்கடி தாகமாக உணருதல் :
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும். உடலில் இருக்கும் திரவங்கள் அடிக்கடி வெளியேறுவதால் இழந்த நீரை ஈடுகட்ட அவசியமாகிறது. அதனால் தான் அதிக தாகம் உண்டாகிறது.
அவ்வபோது தொண்டையில் தாகம் எடுப்பது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும்.
அதிக பசி ஏற்படும்:
முன்பு இருப்பதை விட இப்போது அதிகம் சாப்பிடுகிறீர்கள். உடனே , அடிக்கடி பசி உண்டாகிறது எனில் அதுவும் நீரிழிவு நோய்க்கு அறிகுறியா, காரணமாக இருக்கலாம்.
உடலின் சர்க்கரை ஆற்றலாக மாற்ற போதுமான இன்சுலின் இல்லாததால் பசியை உண்டாக்கும். அதுவே அதிக பசிக்குக் காரணம்.
உடல் சோர்வு:
எந்த ஒரு வேலையும் முடிப்பதற்குள் அதிக சோர்வு ஏற்படக்கூடும். அது, சிறிய வேலையாக இருந்தாலும் கூட.
உடல் எடை பிரச்சனை:
டைப் 1 சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எடை குறைந்து காணப்படுவார்கள். அதே நேரத்தில் அதிக உடல் எடையுடன் டைப் 2 சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள். இவர்கள் சம நிலையில் தங்களது உடல் எடையை பராமரிக்க அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
இவர்தான் இலங்கையின் புதிய பிரதமரா? கலவரங்கள் இனியாவது ஓயுமா?