Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்அதிமுக சார்பில் மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு!

    அதிமுக சார்பில் மக்களை திரட்டி மத்திய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவு!

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்தி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆகியவர்கள் இணைந்த என்.ஆர். தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தனர் என்றும், கடந்த கால ஆட்சி போல இல்லாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதல் போக்கின்றி ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் மக்கள் ஆட்சி நடந்து வருகிறத்து என்றார்.

    இந்நிலையில் மாநில அந்தஸ்து பெற வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் அவர்கள் நிர்வாக ரீதியில் மாநில அந்தஸ்து இல்லாத சூழ்நிலையில் தனக்கு ஏற்படும் நெருடல் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி புதுச்சேரி மாநிலத்திற்கு எந்த ஆட்சி அமைந்தாலும் மாநில அந்தஸ்து தேவை என்ற கருத்தை கூறியுள்ளார். அதற்கு வழக்கம் போல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முதலமைச்சர் அவர்களுக்கு எதிர்மறையான கருத்துக்களை கூறியதோடு அவரை கேவலப்படுத்தியும் பேசியுள்ளனர்.

    மாநில அந்தஸ்தை பற்றி பேற திமுகவுக்கும் காங்கிரசுக்கு அறுகதையில்லை என்று சாடிய அவர், இந்நிலையில் மாநில அந்தஸ்து பற்றி பேசிய முதலமைச்சரை அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், வேறு முதல்வரை நிறுத்தோம் என கூறியுள்ளார். கூட்டணி குறித்தும், முதலமைச்சர் மாற்றம் குறித்தும் தமிழக முன்னாள் முதலமைச்சர் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் முடிவே இறுதியான முடிவாகும். மற்றவர்களுக்கு கூட்டணி குறித்தோ முதலமைச்சர் மாற்றம் குறித்தோ பேசும் உரிமை இல்லை என கூறினார்.

    மேலும் வையாபுரி மணிகண்டனின் கருத்தை அதிமுகவின் கருத்தாக ஏற்றுக்கொள்ள தேவையில்லை. அது அவரது சொந்த கருத்து என்றும், பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்க கூடிய இந்த சூழ்நிலையில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கருத்துகளை சொல்வது கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் எதிர்கட்கிகளின் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும் என்றார்.
    மேலும் புதுச்சேரி மாநில திமுக எதிர்கட்சி தலைவர் சிவா தான் ஒரு எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்துவிட்டு அரசு துறையில் இருக்க கூடிய ஒரு பெண் அதிகாரியை தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று தரக்குறைவாக பேசி மிரட்டி அவமரியாதை செய்துள்ளார்.

    அதிகாரிகளை மிரட்டுவது என்பது ஆணவத்தின் உச்சகட்டம் என்றும், இதன் பேரில் தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாக இருக்கிற துணைநிலை ஆளுநர் அவர்கள் ஒரு பெண்ணுக்கு நடந்த அவமரியாதையை தானாக முன்வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்காக அதிமுக என்.ஆர்.காங்கிரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும், மாநில அந்தஸ்து பெற மத்திய அரசை வலியுறுத்தி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி பெற்று மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என அன்பழகன் கூறினார்.

    இந்திய பொருளாதரத்தில் யூடியூபர்ஸின் பங்கு ரூ.10,000 கோடி… வெளிவந்த ரிப்போர்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....