Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேயர் பிரியா தலைமையில் இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் எப்போது?

    மேயர் பிரியா தலைமையில் இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் எப்போது?

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் வருகிற டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு டிசம்பர் மாதத்திற்கான மாமன்றக் கூட்டம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுவதாக மேயர் பிரியா அறிவித்து உள்ளார். 

    வருகிற 28 ஆம் தேதி நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்குபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்தும், தற்போது செயல்பாட்டில் உள்ளவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

    அதே சமயம் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுபகுதி வலுப்பெற்றது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....