Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்சிறந்த மருத்துவ வசதியை புதுச்சேரி அரசு கொடுக்கும்: முதலமைச்சர் ரங்கசாமி

    சிறந்த மருத்துவ வசதியை புதுச்சேரி அரசு கொடுக்கும்: முதலமைச்சர் ரங்கசாமி

    புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற சூழல் எப்போதும் இருக்கும் என தனியார் உணவகத்தில் நடைபெற்ற தட்டம்மை ரூபெல்லா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி திட்டம் உறுதிப்படுத்துதல் பயிலரங்கத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

    இந்திய அரசாங்கம் 2023 ஆண்டுக்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பல திட்டங்களை அறிவித்துள்ளது. இக்கருத்தை வலியுறுத்தி புதுச்சேரி சுகாதார துறையின் சார்பாக ஹோட்டல் அக்கார்டில் தட்டம்மை ரூபெல்லா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி திட்டம் உறுதிப்படுத்துதல் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் தடுப்பூசி திட்டத்தின் துணை இயக்குனர் ராஜாம்பாள் வரவேற்புரை நிகழ்த்தினார். சுகாதாரத் துறையின் செயலர் உதயகுமார் தலைமை தாங்கினார். முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

    அப்போது பேசிய அவர், அந்தந்த நோய்க்கு தகுந்தவறு தடுப்பூசி கொடுக்கப்படுகிறது என்றும், இவைகளை செலுத்திக்கொள்வது நல்லது என்றும், மருத்துவ வசதி அனைத்தும் கொடுக்க வேண்டியது தான் எனது எண்ணம். புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனை இருக்கிறது என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும், புதுச்சேரி அரசு மருத்துவமனை இருக்கிறது என்ற எண்ணம் வர வேண்டும் என கூறினார்.

    நமது மாநிலத்தில் நிதி ஒதுக்கி அனைத்து வசதிகளும் இங்கு கொண்டு வர வேண்டும் என கூறிய அவர், எதிர்காலத்தில் இன்னும் வசதியுள்ள மருத்துவமனையாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் எல்லைகளில் உள்ளது. அங்கும் சிறந்த மருத்துவ வசதிகளை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளோம் என தெரிவித்த ரங்கசாமி, சிறந்த மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதை அரசு கொடுக்கும் என்று கூறிய அவர், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசால் செய்யமுடியாது.

    சிறிது நேரம் எடுக்கும் அதாவது ஒரு நிகழ்வுக்கு சடங்குகள் இருப்பது போல் கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயார் செய்து அதை ஒப்புதல் வாங்குவது போன்ற பணிகள் உள்ளது என்றும், போராட்டம் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று என கூறினார். மேலும் புதுச்சேரியில் உள்ள மருத்துமனைகளில் மருந்து இல்லை, தடுப்பூசி இல்லை என்ற நிலை இருக்க கூடாது என்று கூறியுள்ளேன். அதே போல் அனைத்தும் இருக்கிறது என்றும், முழுமையாக எல்லோருக்கும் மருத்துவசதி கிடைக்கும் என்ற சூழல் எப்போதும் இங்கு இருக்கும் என பேசினார்.

    விழாவில் சுகாதார துறையின் இயக்குனர் ஸ்ரீராமலு, அரசு மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்பாளர்கள், துறையின் துணை இயக்குனர்கள், உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள், காரைக்கால், மாகி, ஏனம் பிராந்தியங்களின் துணை இயக்குனர்கள், மற்றும் மருத்துவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள், மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அனைவரும், மேற்கொண்ட பயிலரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதையும் படிங்கசபரிமலை தரிசனம்: வரும் 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து சேவை தொடக்கம்.,கட்டணம் எவ்வளவு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....