Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...தெருவில் தஞ்சம் புகுந்த மக்கள்

    துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…தெருவில் தஞ்சம் புகுந்த மக்கள்

    துருக்கியில்‌ இன்று அதிகாலை 6.0 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்‌ ஏற்பட்டுள்ளது. 

    துருக்கி தலைநகர் அங்கராவில் உள்ளூர்‌ நேரப்படி அதிகாலை 4 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

    துருக்கியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள் அதிர்ந்தன. இருப்பினும், இதுவரையில், சேதங்கள் குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இந்த திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமுற்று தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.  

    முன்னதாக, இந்தோனேஷியாவில்‌ திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்‌, நாளுக்கு நாள் உயிர்பலியின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதுவரையில் 260-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    மேலும், இந்திய பிரதமர் மோடி, ‘இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் இந்த மோசமான சூழ்நிலையில் இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....