அருணாச்சல பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தின் பாசார் நகரில் இன்று காலை 7 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கமானது பாசர் நகரின் 58 கி.மீ வட-மேற்குகில் பூமிக்கு அடியில்10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நாசிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கமானது, நாசிக்கிற்கு மேற்கே 89 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காதலிக்கு ரூ.100 கோடியில் வீடா? – பரவும் தகவலுக்கு விளக்கமளித்த ஹிருத்திக் ரோஷன்..