Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் இரு மாநிலங்களில் இன்று நிலநடுக்கம்...

    இந்தியாவில் இரு மாநிலங்களில் இன்று நிலநடுக்கம்…

    அருணாச்சல பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தின் பாசார்‌ நகரில்‌ இன்று காலை 7 மணியளவில்‌ லேசான நிலநடுக்கம்‌ ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கமானது பாசர்‌ நகரின்‌ 58 கி.மீ வட-மேற்குகில்‌ பூமிக்கு அடியில்‌10 கி.மீ ஆழத்தில்‌ ஏற்பட்டுள்ளது. 

    மராட்டிய மாநிலத்தில் நாசிக் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப்‌ பதிவாகி உள்ளது.

    மேலும், இந்த நிலநடுக்கமானது, நாசிக்கிற்கு மேற்கே 89 கி.மீட்டர்‌ தொலைவில்‌ பூமிக்கு அடியில்‌ 5 கி.மீ ஆழத்தில்‌ இந்த நிலநடுக்கம்‌ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுவரை இரு மாநிலங்களிலும் நிலநடுக்கத்தால்‌ ஏற்பட்ட சேதங்கள்‌ குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    காதலிக்கு ரூ.100 கோடியில் வீடா? – பரவும் தகவலுக்கு விளக்கமளித்த ஹிருத்திக் ரோஷன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....