ரூ.100 கோடியில் காதலிக்கு வீடு வாங்கி பரிசளித்ததாக உலவும் தகவலுக்கு நடிகர் ஹிருத்திக் ரோஷன் விளக்கமளித்துள்ளார்.
இந்திய நடிகர்களில் முக்கியமான நடிகராக விளங்கி வருபவர், ஹிருத்திக் ரோஷன். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளம் இந்தியா முழுவதும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளிவந்து பெரிய ஹிட் அடித்த விக்ரம் வேதா திரைப்படத்தை, மறுஉருவாக்கம் செய்து விக்ரம் வேதா என்ற பெயரிலேயே சமீபத்தில் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறுது. இச்சூழலில், நடிகையும் பாடகியுமான சபா ஆசாத்தை ஹிருந்திக் காதலிப்பதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து, மும்பை கடற்கரையை ஒட்டி ரூ.100 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது. இத்தகவல் பெரும் பூதாகரமாக பாலிவூட்டை சுற்றி வந்தது.
இந்நிலையில், இதனை மறுக்கும் விதமாக ஹிருத்திக் ரோஷன் ‘இது உண்மையில்லை. தவறான தகவல். இதனைப் பகிரவேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஹிருத்திக் ரோஷன் தன் முன்னாள் மனைவியை 2014-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
5 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சென்ற ஓரியன் விண்கலம்.!