நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.57 மணியளவில் நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். நேற்று அதிகாலை 4.37 மணியளவிலும், இரவு 8.52 மணியளவிலும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.
நேபாளத்தில் இந்த நிலநடுக்கத்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். சிலர் மருத்துவமனையில் பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில், சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்திய தலைநகர் தில்லி வரை உணரப்பட்டுள்ளது. தில்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இது உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது டெல்லி மட்டுமல்லாமல், நொய்டா, ஹரியாணா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: காதல் யார் மீதும் வரும்: ஆணாக மாறி தன்னிடம் படித்த மாணவியையே திருமணம் செய்த ஆசிரியை!