புதுச்சேரி வீராம்பட்டினத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கதண்டு என்ற விஷ வண்டுவை தீயணைப்பு துறையினர் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினத்திலிருந்து சின்ன வீராம்பட்டினம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள பனைமரத்தில் கதண்டு என்ற வகை விஷ வண்டுகள் கூடுகட்டி இருந்தது. இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், ஊர் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இந்த வண்டு கடித்ததால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரியாங்குப்பம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அரியாங்குப்பம் காவல்துறையினர் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் மின்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் விஷ வண்டு கூண்டினை இரவு தீயிட்டு அழித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
14 கடைகளுக்கு சீல் வைப்பு! நகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு