புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் காய்கறி மற்றும் மீன் விற்பனை அங்காடி வளாகத்தில் 7 வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ள 14 கடைகளை நகராட்சி ஆணையர் பூட்டி சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் காய்கறி மற்றும் மீன் விற்பனை அங்காடி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 32 கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் மளிகை, பூக்கடை, டைலர் கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வாடகை பாக்கி பல்வேறு கடைகளில் நிலுவையில் உள்ளதாக ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூ50 ஆயிரத்துக்கு மேல் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு வாடகை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து வாடகை பாக்கி, வரி மற்றும் உரிமம் பெறாத 14 கடைகளுக்கு நேற்று அதிரடியாக சீல் வைக்கப்பட்டது.
இதில் ஆணையர் ரமேஷ் தலைமையில், இளநிலை பொறியாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழுவினர் நேரிடையாக கடைகளுக்கு சென்று சீல் வைனர். மேலும் குறிப்பிட்ட கால தவணைக்குள் மாத வாடகை செலுத்தாத இந்த கடைகளுக்கு மறு ஏலம் விடுவதாகவும் ஆணையர் ரமேஷ் தெரிவித்தார். இதுபோன்று 14 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்த சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரின் ‘சில்லா சில்லா’ பாடல் யூடியூப்பில் புரியும் சாதனை..