உலகிற்கே இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தது தற்போது ஜி.20 நாடுகள் தலைமை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அரவிந்தரின் தபால் தலை வெளியிடப்பட்டதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற அரவிந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம் மற்றும் தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைநிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உலகிற்கே இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார் அவர் நினைத்தப்படி ஜி.20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது அதனால் அவருக்கு தபால் தலை வெளியிடப்படுகின்றது.
மேலும் எல்லோரும் நாணயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் அதற்காக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகின்றது. தாய்மொழிக்கல்விதான் வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார் அதனால் தான் புதியகல்விக்கொள்கையை பிரதமர் கொண்டுவந்தார் அவரது பெருமையை போற்ற வேண்டும் என ஆளுநர் தமிழிசை புகழாரம் செய்தார்.
அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம், அஞ்சல் தலை வெளியீடு; காணொளி மூலம் வெளியிட்டார்