Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரவிந்தர் நினைத்ததை பிரதமர் மோடி செயல்படுத்துகிறார்; ஆளுநர் தமிழிசை புகழாரம்

    அரவிந்தர் நினைத்ததை பிரதமர் மோடி செயல்படுத்துகிறார்; ஆளுநர் தமிழிசை புகழாரம்

    உலகிற்கே இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தது தற்போது ஜி.20 நாடுகள் தலைமை மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அரவிந்தரின் தபால் தலை வெளியிடப்பட்டதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியில் நடைபெற்ற அரவிந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம் மற்றும் தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைநிலைஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், உலகிற்கே இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார் அவர் நினைத்தப்படி ஜி.20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது அதனால் அவருக்கு தபால் தலை வெளியிடப்படுகின்றது.

    மேலும் எல்லோரும் நாணயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் அதற்காக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகின்றது. தாய்மொழிக்கல்விதான் வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார் அதனால் தான் புதியகல்விக்கொள்கையை பிரதமர் கொண்டுவந்தார் அவரது பெருமையை போற்ற வேண்டும் என ஆளுநர் தமிழிசை புகழாரம் செய்தார்.

    அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம், அஞ்சல் தலை வெளியீடு; காணொளி மூலம் வெளியிட்டார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....