தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள துணிவு திரைப்படம் வாரிசு திரைப்படத்தை விட அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகும்.
விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது.
இவர்கள் இருவரின் திரைப்படமும் வெவ்வேறு நாளில் தனித்தனியாக வெளியாகும் நாளே திருவிழா கோலம் புகும் என்றால், இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியானால் அது திருவிழாக்களின் திருவிழா தான் .
அந்த வகையில் தற்போது, வாரிசு என்ற திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். அதேபோல, அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த இரு திரைப்படங்களும் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், எந்த திரைப்படம் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகிறதென்ற தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் தமிழகத்தில் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 600-க்கும் மேலான திரையரங்குகளில் துணிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணிவு திரைப்படத்தை விட குறைவான திரையரங்குகளிலேயே வாரிசு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாற்று மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டோம் என்ற முடிவை அம்மாநிலங்களின் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. இதனால், வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சிக்கல் எற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணை நிலவரம்: தொடர்ந்து உயரும் நீரின் அளவு..