நடிகர் விஜய் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை தன் கைகளால் தூக்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.
வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ மற்றும் ‘தீ தளபதி’ பாடல்கள் யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. அதன்படியே, நேற்று நடிகர் விஐய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தவகையில், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படமானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், நேற்று நடைபெற்ற சந்திப்பில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டதாகவும், மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: தொடக்கத்திலேயே சரியும் இந்திய வீரர்கள்