வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவர்களுள் 20 ரன் எடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, கே. எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். தற்போது, விராட் கோலி மற்றும் புஜாரா விளையாடி வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி கே.எல். ராகுல் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக, மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் பீல்டிங்கின் போது, ரோஹித் சர்மா பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இப்படித்தான் ஆரம்பிக்கிறதா… வெளிவந்த தகவல்..