Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக ஓடிய விமானம்! நூலிழையில் உயிர் தப்பிய 173 பயணிகள்

    கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் தாறுமாறாக ஓடிய விமானம்! நூலிழையில் உயிர் தப்பிய 173 பயணிகள்

    கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. 

    ஏர்பஸ் ஏ330 விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது கிராஸ் க்ராஸிங் ஓடுபாதையில் சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் 162 பயணிகள் மற்றும் 11 பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில், விபத்துக்குள்ளான விமானம் அதிக சேதம் அடைந்துள்ளது. 

    விபத்து நிகழ்ந்ததும் விமானத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவசர வாயிலைப் பயன்படுத்தி வெளியேறினார்கள்.  இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டது.

    மழை காரணமாக பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில் இந்தச் விபத்து சம்பவம் நடைப்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ அரசு விசாரணை நடத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: வெளிவந்த முதல் நாளே பிரின்ஸ் , சர்தார் படங்களை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்…!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....