Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்.,கைது செய்த போலீசார்

    தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்.,கைது செய்த போலீசார்

    புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூடாது, தற்போது தேர்வு செய்யப்பட்டுவரும் அரசுப்பணிகள் அனைத்தும் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ய வேண்டும், மாநிலத்தில் உள்ள எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., ஆகிய இட ஒதுக்கீடுகளையே வேலைவாய்ப்பில் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

    சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்பி வைத்தியலிங்கம், காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காமராஜர் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு நேரு வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றனர்.

    அப்போது அவர்களை அம்பலத்தடையார் மடம் வீதி சந்திப்பில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து பேரணியில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதையும் படிங்கஎங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை., பாஜகவை அனுமதிக்க முடியாது., சீமான் காரசார பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....