Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; முன்ஜாமீனை மறுத்த உயர்நீதிமன்றம்..

    கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; முன்ஜாமீனை மறுத்த உயர்நீதிமன்றம்..

    கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்கள் இருவர் கோரிய முன்ஜாமீனை நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா. 17 வயதாகும் பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக விளங்கி வந்தார். இதனால், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் படித்து வந்த பிரியாவுக்கு கால்பந்து பயிற்சியின்போது காலில் தசைப்பிடிப்பு எற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, பிரியாவை கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

    ஆனால், பிரியாவுக்கு அதன் பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, காலை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

    இதனிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. 

    அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன் பின்னர் உடற்கூராய்விற்கு பிரியாவின் பிரேதம் உட்படுத்தப்பட்டது. 

    இதையும் படிங்கமாணவி பிரியா மரணத்தில் கடமையை செய்ய தவறிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு: அமைச்சர் மா.சுப்ரமணியன்

    பிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரது உடலை எடுத்துச்செல்ல வாகனத்தில் மாற்றப்பட்டபோது, அந்த வாகனத்தை மறித்து, பிரியாவின் உறவினர்களும், நண்பர்களும் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து, பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்த நிலையில் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. 

    இதைத்தொடர்ந்து, கவனக்குறைவாக செயல்பட்ட பெரியார் நகர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் கே.சோமசுந்தர், முடநீக்கியல் துறைப் பேராசிரியர் டாக்டர் பால் ராம் சங்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

    இதனிடையே, பிரியாவின் தந்தை ரவிக்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரவள்ளூர் போலீஸார், ஐபிசி 174 பிரிவின் கீழ் சந்தேக மரணத்துக்கான வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை மருத்துவ வாரியம் காவல்துறையிடம் அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது குற்றத்தின் தன்மை அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகள், அவர்களது இல்லத்துக்குச் சென்ற போது, இரு மருத்துவர்களும் தலைமறைவானது தெரியவந்தது.

    இந்நிலையில் மருத்துவர்கள் கே.சோமசுந்தர், ஏ.பால் ராம் சங்கர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.

    முன்னதாக, உயிரிழந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க2024 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதுவே தனது கடைசி தேர்தல்: சந்திரபாபு நாயுடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....