Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புசமூகநலத் துறையில் வேலை: வெளியான அரசின் அறிவிப்பு

    சமூகநலத் துறையில் வேலை: வெளியான அரசின் அறிவிப்பு

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளிவந்துள்ளது. 

    தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர் போன்ற 11 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தினமாக 17-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இந்த பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804 வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்போர் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள முகாமைத்துவம் போன்ற ஏதாவதொன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல், அமல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் போன்றவற்றில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 40–ற்குள் இருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் chennai.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

    இது குறித்து மேலும் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/09/2022092988.pdf லிங்கை அனுகவும். 

    இதையும் படிங்க:இங்க மட்டும் இல்ல.. எங்க போனாலும் வைரல் தான்! அண்ணாமலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....