தென்னிந்தியாவில் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் அந்த இருவரின் திரைப்படங்களும் ஒரே பண்டிகையில் விரைவில் வெளியாகவுள்ளன. தங்களுக்குள் மோதல் இல்லை என்று வெளியே சொல்லிக் கொண்டாலும், மறைமுகமாக அந்த இரு நட்சத்திரங்களுக்கு உள்ளேயும் தொழில் ரீதியிலான போட்டி என்பது தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
இருவரில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற ஓப்பிடு இருவரும் திரைக்கு வந்த முதல்நாள் தொட்டு இன்று வரை நீடித்திருக்கிறது. இந்த ஒப்பீடு ரசிகர்களுக்கு இடையே மட்டும் நிலவி வந்த நிலையில், சமீப காலமாக திரைப்பிரபலங்களும் இந்த ஒப்பிட்டில் இறங்கியுள்ளனர். குறிப்பாக தயாரிப்பாளர்கள்.
இரு நடிகர் படங்களின் தயாரிப்பாளர்களும், தங்கள் நடிகர்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி வந்த நிலையில், பண்டிகைக்கு வெளியாகவுள்ள அந்த படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படையாக, இவர்தான் தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழக திரையுலகமே அதிர, அந்த அக்கட தயாரிப்பாளர் பல இன்னல்களுக்கு உள்ளானார். என்னதான் இன்னல்கள், சர்ச்சைகள் வந்தாலும் அந்த தயாரிப்பாளர் தன் படத்தை அயராது புரோமட் செய்து வருகிறார். ரயில்களில் போஸ்டர்கள் மின்ன ஆர்ம்பித்தது.
இதைக்கண்ட அந்த வட தயாரிப்பாளர், ரயில் எல்லாம் வேண்டாம், விமானத்தை கொண்டு வரச்சொல்லி தன் படத்தின் புரோமஷனை ஆரம்பித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க அந்த அக்கட தயாரிப்பாளர் தற்போது தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த உச்ச நடிகர்களின் மோதல், தயாரிப்பாளர்கள் வரை நீடித்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், திரையுலகினர் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான் என சிரிக்கின்றனர்..
ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘இம்பாக்ட் வீரர்’ முறை; விதிகள் என்னென்ன?