பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மூன்று கதாநாயகிகளில் அதிகம் பேசப்படாமல் போனாலும், அந்த நாயகிக்கு இளைஞர்கள் அதிகளவு வரவேற்பு கொடுத்தனர். அந்தப் படத்தின் ஹிட் அடுத்தடுத்த வாய்ப்பை அந்த நடிகைக்கு வழங்கியது.
இதனால், மலையாளத் திரைப்படங்களில் அந்த நடிகை நடித்து வந்தார். நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற, தெலுங்கிலும் தமிழிலுமே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழில் ஒரு பெரிய ஹிரோவுடன் கோழி முட்டை சார்ந்த கதாப்பாத்திரத்தில் அவர் நடித்த படம் ‘ஆவ்ரேஜ்’ என்ற நிலையையே அடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் அவ்வளவாக அந்த நாயகி எட்டிப்பார்ப்பதில்லை.
அதேநேரம், தெலுங்கில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்களிடம் வரவேற்பையும், நடிகைக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுத்தது. கடந்த ஆண்டின் மத்தியில் கூட அவரின் திரைப்படம் ஒன்று நூறு கோடி எனும் மாபெரும் வசூலை அடைந்தது.
இது மட்டுமின்றி சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமொன்று சக்கைப்போடு போட்டிருக்கிறது. இதனால், அந்த நடிகை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
60 லட்சம் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நடிகை தற்போது 1 கோடியே 20 லட்சம் ரூபாயை சம்பளமாக கேட்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். சில தயாரிப்பாளர்கள் நடிகையின் இந்த சம்பளத்திற்கு ஓகேவும் தெரிவித்துள்ளனராம். இதனால் தற்போது நடிகை ஆனந்தத்தில் உள்ளார்.
மாஸூம் க்ளாஸூம் சேர்ந்த ‘ஏகே’ – துணிவு புகைப்படங்கள்