வடகொரியாவில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், வடகொரியாவின் எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக தென் கொரியாவின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளதாவது :
நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா நிலையான ராணுவ வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் எல்லையில் ஞாயிறு காலை பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. சில மணி நேரங்கள் இந்தச் சத்தம் தொடர்ந்தது.
இவ்வாறு தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவின் இந்தக் கருத்துக்கு, “நாங்கள் ஆயுத பரிசோதனைதான் நடத்தினோம்” என்று விளக்கமளித்துள்ளது. அதேசமயம், அங்கு நடைபெற்றவை எம்மாதிரியான சோதனை என்பதையோ, எதுக்காக அந்த சோதனை நடத்தப்பட்டது என்பதையோ வட கொரியா தெரிவிக்கவில்லை.
மேலும், வாஷிங்டன் மற்றும் சியோல் அதிகாரிகள், வடகொரியா தனது ஏழாவது அணுசக்தி சோதனையை நடத்த தயாராகி வருவதாக எச்சரித்துள்ளனர். வடகொரியாவின் இந்த சோதனை “விரைவான மற்றும் வலிமையான” எதிர்விளைவைத் தூண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கியது ரஷ்யா