Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்குறைவான விலையில் சந்தைக்கு வந்துள்ள மோட்டோ ஜி52; வாங்கலாமா? வேண்டாமா?

    குறைவான விலையில் சந்தைக்கு வந்துள்ள மோட்டோ ஜி52; வாங்கலாமா? வேண்டாமா?

    நவீன தொழில்நுட்ப உலகில், மொபைல் போன் இல்லாமல் யாரும் இல்லை. மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், பயனாளிகளின் வசதிகளுக்கு ஏற்ப மொபைல் நிறுவனங்கள் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை செய்து, புதிய ரக போன்களை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது.

    இவ்வகையில், மோட்டோரோலா நிறுவனம், Moto G52 வகை மொபைல் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனமான மோட்டோரோலா, எலக்ட்ரானிக் வகைப் பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் மோட்டோ எனும் பெயரில் மொபைல் போன்களை விற்பனை செய்கிறது. உலக அளவில் மொபைல் போன்களுக்கு மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ள மோட்டோ, இந்தியாவிலும் ஏராளமான பயனாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

    இதுவரை ஏற்கனவே ஏராளமான புதிய மாடல்கள் வந்துள்ள நிலையில், இந்நிறுவனம் கடந்த வாரம் மோட்டோ ஜி52 மாடலை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இந்த மொபைல் போன் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல் போன், இ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரண்டு விதமான வேரியண்டுகளில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைல் போன் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூபாய் 14,499 ஆகும். இதேபோல் 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை 16,499 ஆகும்.

    மோட்டோ ஜி52 சிறப்பம்சங்கள்:

    இந்த மொபைல் போனின் தடிமன் 7.88 மிமீ மற்றும் அதன் எடையானது 169 கிராம் ஆகும். தொலைபேசியின் அளவு 160.98×74.46×7.99 மிமீ ஆகும். இது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.6 இன்ச் முழு எச்டி+ pOLED பஞ்ச் ஹோல் டாட் தொடுதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு இந்த ஆன்ட்ராய்டு போன் இயக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரு வித வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம், ஒரு TB வரை சேமிப்பகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

    இந்த மொபைல் போனில், 50எம்பி மெகாபிக்சல் கேமரா, 8எம்பி மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்பட மூன்று கேமராக்களை பின்புறத்தில் கொண்டுள்ளது. இதேபோல், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. 5000 MAH பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 30 வாட் வரையில் வேகமாக சார்ஜ் ஏறும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் போன், இந்தியாவின் மிக மெல்லிய மற்றும் இலகுவான செல்போனாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா முடியட்டும்: குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறும்: அமித்ஷா திட்டவட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....