Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்வாட்சப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?

    வாட்சப்பில் இப்படி ஒரு அப்டேட்டா?

    தகவல் பரிமாற்றச் செயலியான வாட்சப் செயலி புதிய அம்சம் ஒன்றை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    இந்த வகையில், வாட்சப் நிறுவனம் தற்போது புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,‘Expiring groups’ என்ற அம்சம் இந்த தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்சப் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத வாட்சப் குழுக்களை அடையாளம் கண்டு நீக்கலாம். 

    மேலும், இதன் மூலம் பயனர்கள் எந்த தேதியில் அந்த குழுவை தங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள முடியுமாம். அதனை நாள், வாரம், மாத கணக்கில் நிர்ணயிக்க முடியுமாம். குழு காலாவதியாகும் தேதி வந்ததும் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் வருமாம். அதன் அடிப்படையில் பயனர்கள் அந்த குழு குறித்த இறுதி முடிவை எடுக்க முடியும். 

    இந்த வசதி தற்போது உருவாக்கத்தில் இருப்பதாகவும் விரைவில் இது அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....