நேற்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள டாங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
தெற்கு பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றுதான், டாங்கா தீவு. இந்த தீவில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், டாங்காவின் நீயாஃபு நகருக்கு 211 கி.மீ. தொலைவிலுள்ள கடல்பகுதியில், 24.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், சேதங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை . மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இவை பழங்களா? பண மூட்டைகளா? உலகின் விலை உயர்ந்த கனிகள் குறித்த ருசிகர தகவல்…