Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நேபாளம், அந்தமானை தொடர்ந்து பசிபிக் பெருங்கடலிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

    நேபாளம், அந்தமானை தொடர்ந்து பசிபிக் பெருங்கடலிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

    நேற்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள டாங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

    தெற்கு பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் ஒன்றுதான், டாங்கா தீவு. இந்த தீவில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், டாங்காவின் நீயாஃபு நகருக்கு 211 கி.மீ. தொலைவிலுள்ள கடல்பகுதியில், 24.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரையில், சேதங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை . மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இவை பழங்களா? பண மூட்டைகளா? உலகின் விலை உயர்ந்த கனிகள் குறித்த ருசிகர தகவல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....