Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்குரங்கம்மை நோய்த்தொற்று; அபாயத்திற்கு வழிவகுக்கிறதா?

    குரங்கம்மை நோய்த்தொற்று; அபாயத்திற்கு வழிவகுக்கிறதா?

    உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

    நைஜீரியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளுக்‍கும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்‍க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் திரு.டெட்ரோஸ் அதானோம், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது, கவலைக்குரியது என கூறினார். இதன் பாதிப்பு சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு, சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசர கமிட்டியை கூட்ட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    “குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த தொற்றுநோய், குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது. மேலும் சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும்.

    இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் வரலாற்று ரீதியாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.

    தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எலிகள், அணில்கள் மற்றும் வளர்ப்பு செல்லப்பிராணிகள் உட்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும், இது மனித நோய்த்தொற்றின் தொடர்ச்சியான அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்”.

    இதுவும் காதல் மாதம்தான்; ஜூன் மாதம் ‘ப்ரைட் மாதம்’ என ஏன் கொண்டாடப்படுகிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....