ட்விட்டரைத் தொடர்ந்து மெட்டா நிறுவனமும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வசப்படுதியதிலிருந்து தினம் ஒரு அதிர்ச்சிகரமான செயலை, தகவலை அறிவித்துக்கொண்டே இருக்கிறார். ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை பெரும் சர்ச்சையையும், ஆச்சரியத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரைத் தொடர்ந்து, தற்போது மெட்டா நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முகவலைதளம், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டா ஏராளமான ஐடியாக்களை தன்னிடத்தில் வைத்துள்ளாதக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், ஊழியர்கள் குறைப்பு குறித்த தகவல்கள் ஊழியர்களிடையே கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், வெளிவந்துள்ள தகவல் பொய்யானதாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் வரிசையில் மெட்டாவும் ஊழியர்களை பணி நீக்கும் செயலில் ஈடுபட்டால், பிற நிறுவனங்களும் ஊழியர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட அதீத வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வெளியானது 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! விவரம் உள்ளே…