Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபாலியல் வன்கொடுமை புகாரில் கைதான இலங்கை வீரர்; அடுத்த நடவடிக்கை என்ன?

    பாலியல் வன்கொடுமை புகாரில் கைதான இலங்கை வீரர்; அடுத்த நடவடிக்கை என்ன?

    பாலியல் வன்கொடுமை புகாரால் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

    2022-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2-ஆம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாததால், அந்த அணியினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். தனுஷ்கா குணதிலகா கைதாகியுள்ளதால், அவர் மட்டுமின்றி இலங்கை அணி நாடு திரும்பியது. 

    மேலும், தனுஷ்கா குணதிலகா மீதான பாலியல் புகார் நிரூபணம் ஆனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: “தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்”.. சென்னையில் இருந்து தொடங்கியது சோதனை ஓட்டம்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....