Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்200 வார்டுகளில்‌ 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்; மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

    200 வார்டுகளில்‌ 200 மழைக்கால மருத்துவ முகாம்கள்; மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுரை

    சென்னையில் நாளை 200 வார்டுகளில்‌ 200 மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடைபெற உள்ளது. 

    வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும்‌ காரணத்தினால்‌ பருவமழைக்கால நோய்களான டெங்கு, இன்புளுயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண்‌ மற்றும்‌ உடல்‌ உபாதைகள்‌ ஏற்படாமல்‌ தடுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறையும்‌ -பெருநகர சென்னை மாநகராட்சியும்‌ இணைந்து 200 வார்டுகளில்‌ 200 மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ பொருட்டு நடத்த உள்ளது.

    இது குறித்து வெளிவந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

    தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, வருகிற நவம்பர்‌ 5-ந் தேதி, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை – பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில்‌ உள்ள 200 வார்டுகளிலும்‌ மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்‌ நடத்தவுள்ளது. இந்த முகாமானது  காலை 9 மணிமுதல்‌ மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 

    இதையும் படிங்க: 61 வயதில் 87 திருமணங்கள்.,‘ பிளேபாய் கிங்’ பட்டம்., மீண்டும் 88-வது திருமணம்., என்னடா நடக்குது இங்க..!

    இந்த முகாம்களில், விருகம்பாக்கம்‌ சட்டமன்ற தொகுதி கலைஞர்‌ நகரில்‌ உள்ள இராணி அண்ணாநகர்‌ பகுதியில்‌ நடைபெறும்‌ மருத்துவ முகாமை மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ தலைமையில்‌, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ திரு.கே.என்‌.நேரு தொடங்கி வைக்கிறார்‌.

    மேலும்‌, அந்தந்த பகுதிகளில்‌ நடைடுபறும்‌ அனைத்து மருத்துவ முகாம்களையும்‌ அதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்‌ 

    இதைத்தொடர்ந்து, இந்த முகாம்களில்‌ காய்ச்சல்‌, சளி, வயிற்றுப்போக்கு முதலிய மழைக்கால தொற்று நோய்களுக்கு தேவையான தகுந்த சிகிச்சைகள்‌ வழங்கப்படும்‌. பொது மக்களுக்கு நோய்‌ எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்‌ பொருட்டு நிலவேம்பு குடிநீர்‌ மற்றும்‌ ஓ.ஆர்‌.எஸ்‌ வழங்கப்படும்‌. இந்த மருத்துவ முகாம்களில்‌ காய்ச்சல்‌ மற்றும்‌ இதர உபாதைகள்‌ கண்டறநியப்படுவர்கள்‌ மேல்சிகிச்சை தேவைப்படும்‌ நிலையில்‌ இருந்தால்‌ அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்படுவார்கள்‌. 

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது தேவையில்லாத ஒன்று- தமிழிசை கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....