தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து 3 நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சில மாவட்டங்களுக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு மட்டும் இந்தூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர், பொன்னேரி ஆகிய தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குன்றத்தூர் பகுதியில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலில் வார்னிங்., அபராதம்., ஏலம்., குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை எச்சரிக்கும் காவல்துறை..!