Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்திருமணத்திற்கு வரன் பார்க்கிறீர்களா? இந்த சாமுத்திரிகா குணாதிசயங்கள் இருக்கானு பாருங்க...

    திருமணத்திற்கு வரன் பார்க்கிறீர்களா? இந்த சாமுத்திரிகா குணாதிசயங்கள் இருக்கானு பாருங்க…

    திருமணத்திற்கு வரன் பார்க்கிறீர்களா? இந்த சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் குணாதிசயங்களில் குறைந்தது 8 குணாதிசயங்கள் (லக்ஷனா) உள்ள ஒருவரை கண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சரி சொல்லி விடுங்கள்!

    உங்கள் பையனிடம் இந்த சாமுத்திரிகா சாஸ்திரம் கூறும் குணங்கள் இருந்தால், அவர் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்று அர்த்தம். திருமண வயதை ஒரு பெண் எட்டியவுடன், ஒவ்வொரு பெற்றோருக்கும், தங்கள் மகளுக்கு சரியான வாழ்க்கை துணையாய் தேடுவது என்பது ஒரு பெரும் கவலையாக மாறிவிடுகிறது.

    இது விளையாட்டு இல்லை அவர்கள் மகளின் வாழ்க்கையே இதில் தான் அடங்கி உள்ளது என்பது உண்மைதான்.

    வரன் தேடுகையில் எதை கவனிக்க வேண்டும்?

    சாமுத்திரிகா சாஸ்திரம் என்பது , ஒரு நபரின் ஒளி, முகம், ஆளுமை மற்றும் முழு உடல் பற்றிய வேத ஆய்வு ஆகும்.

    ஒரு நல்ல ஆண்மகனின் பண்புகள்:

    உதாரணமாக, நாம் இந்து மதத்தைப் பார்க்கலாம், ராமாயணம் அல்லது மகாபாரதம், சீதா மற்றும் திரௌபதி ஆகியோரின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு பொருத்தமான துணையாய் தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர்; கௌரவர்கள் மற்றும் முனிவர்கள் கூட ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து சுயம்வரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

    பண்டைய கால முனிவர்கள், ஆண்களுக்கென்று சில சிறப்பியல்பு அளவுருக்களை வகுத்தனர், அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்மகனையும் மதிப்பீடு செய்து அவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கையை அமைத்து கொடுத்தனர்.

    இந்த ஆய்வின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், இந்த 10 ‘லக்ஷனங்களை’ மனிதனின் வாழ்க்கைத் துணைககளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தேட வேண்டும்.

    சாமுத்திரிகா லட்சணங்கள்;
    • சாமுத்திரிகா சாஸ்திரத்தின்படி கூறப்படும் ஒரு மனிதன் லட்சியவாதியாகவும், தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் தாழ்மையானவனாகவும் இருக்கிறான்.
    • ஒரு ஆண் மகன் என்பவன் தனது வாழ்க்கையில் உள்ள எல்லோரை பற்றியும், அவனுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களைப் பற்றியும் மிகவும் எச்சரிக்கையாக கையாள நினைப்பான்.
    • அவர் ஒரு திட்டமிட்டு செயலாற்றுபவராக இருக்கக்கூடாது, ஆனால் வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடித்து நல்லதொரு தீர்வு காண்பவராக இருக்க வேண்டும்.
    • கடினமான உழைப்பைத் தாங்கும் உறுதியையும் கடினத்தன்மையையும் கடைபிடிக்கும் ஒரு மனிதன், எக்காலத்திலும் கடின உழைப்பை கண்டு பயப்படுவதில்லை.
    • ஒரு சிறந்த ஆண்மகன் என்பவன் ஒருபோதும் கோழையாக இருக்கமாட்டான். அதுவும், கொள்ளையர்கள் மற்றும் எதிரிகளால் தாக்கப்படும்போது அவன் எளிதில் தப்பிக்க நினைக்க மாட்டான்.
    நன்னடத்தையுள்ள மனிதன்..
    • ஒரு நன்னடத்தையுள்ள மனிதன், குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் உணவு மற்றும் சொத்துக்களின் சமமான மற்றும் தாராளமாக கொடுத்தால் மற்றும் பகிர்ந்து வாழ்வது போன்றவற்றின் மீது நம்பிக்கை வைத்து செயல்படுகிறான்.
    • சுகாதார நலன்களை மனதில் வைத்து, சூரியனுக்கு முன் காலையில் எழுந்து விடுவது போன்றவைகளை நம்பும் ஒரு ஆண்மகன் மற்றவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டுவான். நல்ல எண்ணம் கொண்ட மனிதர் இது போன்ற சுகாதார நலன்களை கண்டிப்பாக பின்பற்றுவார்.
    • எந்த ஒரு ஆண்மகன், நன்கு கேட்கும் காது மற்றும் இதயம் கொண்டவனோ, அவன் தனது வாழ்க்கை துணையின் தேவைகள் மற்றும் ஆசைகளை உணர்ந்தவனாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்காகவும் செயல்படுகிறான்.
    • ஒரு சிறந்த ஆண்மகன் என்பவன், தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான சிக்கல்கள் தனது உறவுகளை பாதிக்காத வண்ணம் செயல்படுகிறான். அவனது தொழில் ரீதியான சிக்கல்கள் ஏற்படுத்தும் அபாயத்தைப் புரிந்து நடந்து கொள்கிறான்.
    • விரைவான சிந்தனையாளராகவும் இவர்கள் திகழ்வார்கள். ஒரு நன்னடத்தை கொண்ட மனிதன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சண்டையிடும் போது ஒருபோதும் வன்முறையில் ஈடுபடுவதில்லை. அவன் தனது குடும்ப விஷயங்களுக்கு வரும்போது, நிதானம் மற்றும் கவனத்தை கடைபிடிக்கிறான்.
    • பெரும்பாலான ஆண்கள் தங்கள் ஆண்மையின் வலிமை விவரங்களை தனது சகாக்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களை மற்றவர்கள் முன்னிலையில் பெருமையாக்கும் என்று தவறாக கருதுகின்றனர். ஆனால், தனது காதல் வாழ்க்கையின் அந்தரங்கத்தை மதிக்கும் எந்த ஒரு நபரும் நிச்சயமாக இதை மற்றவர்களுடன் பகிரமாட்டார்கள் என்பதே உண்மை.
    • ஒரு சிறந்த ஆண் மகன் தனது வாழ்க்கையின் தேவையற்ற விஷயங்களை சேமித்து வைப்பதை விரும்ப மாட்டான்.
    • அவன் நன்மக்களின் நடத்தை மற்றும் தனது மனத்திற்கு பிடித்த/புத்துணர்ச்சியூட்டும் நினைவுகளை மட்டுமே பாதுகாக்கிறான். அதும், அவனுக்கு மிகவும் பிடித்தவை மற்றும் அவசியமானவை மட்டுமே.
    •  அவன் விதிவசத்தால் பூமிக்கு கீழே சென்றாலும், அவனது செல்வத்தையும் வெற்றிகளையும் யாராலும் அழிக்க முடியாது. அதுமட்டும் இன்றி, அவனது நல்லறிவு, பெருமை, மகத்துவம் மற்றும் தோற்றத்தையும் கூட மற்றவர்களால் அழிக்க இயலாது.
    • ஒரு சிறந்த மனிதன், தனது உணவின் மூலம் சரியான ஊட்டச்சத்தை உட்கொள்வதையும், அவனது உடல்நிலை குறித்த விழிப்புணர்வையும் எப்பொழுதும் நம்புகிறான், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய அவன் ஊக்குவிக்கிறான். இதற்காக அவன் மற்றவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு செய்ய அவசியம் இல்லை. அவனது நடத்தையே மற்றவர்களுக்கு இதை உணர்த்தும்.
    சாமுத்திரிகா சாஸ்திரத்தின்படி கூறப்படும் குணங்களில் கடைசியாக நாம் பார்ப்பது….

    ஒரு சிறந்த ஆண்மகன் நம்பிக்கையுடனும், அதும் நன்மைக்கான நம்பிக்கையுடனும் எப்பொழுதும் இருப்பார். மேலும், அவரது கனவுகளையும் வெற்றிக்கான வழியையும் அடையும் முயற்சியையும் அவர்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை.

    பாஜக மத்திய சென்னை பட்டியலின பிரிவு தலைவர் பாலச்சந்தர் வெட்டிப் படுகொலை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....