பாஜக மத்திய சென்னை பட்டியலின பிரிவு தலைவர் பாலச்சந்தர் என்பவரை வெட்டிப் படுகொலை செய்யபப்ட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலுள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரும் பாஜக மத்திய சென்னை மாவட்ட பட்டியலின பிரிவு தலைவருமானவர் பாலச்சந்தர். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இவருக்கு காவலர் பாதுகாப்பு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலச்சந்தரின் பாதுகாப்பிற்காக இருந்த காவலர், அருகில் இருந்த கடையில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் பாலச்சந்தரை ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடியுள்ளது.
இத்தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பாலச்சந்தரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொலையாளிகள் யார் என்பதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையிலும், பாலச்சந்தருடன் முன் விரோதத்தில் இருந்தவர்களான பிரதீப், சஞ்சய், கலைவாணன் ஆகியோர் தான் குற்றவாளிகள் என்று கண்டறிந்து 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடிவருகின்றது.
இந்நிலையில் இந்தக் கொலை குறித்த பின்னணி தகவல்களும் வெளியாகி உள்ளன. கொலையாளிகள், பாலசந்தரின் சகோதரர்கள் துணிக்கடையில் தொடர்ந்து மாமூல் வசூலித்து வந்ததாக தெரிகிறது. இதனை எதிர்த்த பாலச்சந்தர், பிரதீப்பை கைது செய்ய முக்கிய காரணமாக இருந்துள்ளார். பிரதீப் இதேபோல், அப்பகுதியிலுள்ள பல்வேறு கடைகளிலும் மாமூல் வாங்குவதை வழக்கமாக்கி வந்திருக்கிறார். இதன் மூலமும் பிரதீப் கைது செய்யப்பட்டு பின்பு வெளியே வந்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதற்கு பாலச்சந்தர் தான் காரணம் என்று எண்ணிய பிரதீப், ஏற்கனவே பாலச்சந்தரின் பாதுகாப்பிற்காக இருந்த ஒரு காவலரையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இதன் காரணமாகவும் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பாலச்சந்தருக்கு பிரதீப்பால் அடிக்கடி தொந்தரவு இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பாலச்சத்தரின் குடும்பத்தினர், ஏற்கனவே இதுகுறித்து பலமுறை புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரை, காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் தான், காவல் நிலையம் இருந்த அதே பகுதியில் பாலச்சந்தரை வெட்டிச் சாய்த்து தப்பி ஓடியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிவந்துள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக இருந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளார். பாலச்சந்தரின் பாதுகாப்பில் காவல் துறையினர் மெத்தனப் போக்குடன் செயல்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!