Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஅதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு...

    அதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு…

    நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

    அதன்படி, காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதேசமயம், ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பூதியமாக மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் ஊதிய விகிதம் ரூ.8,600 – 29,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: இணையத்தில் பரவிய உல்லாச புகைப்படம்: உயர் அதிகாரிகளுக்கு பரந்த புகார் மனுவால் பரபரப்பு..

    இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்காக பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் தமிழ் மொழியில் எழுதப் படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். வயது, 1.7.2022 தேதியின்படி18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    விண்ணப்பத்தாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பத்தாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், தொடர்புடைய இதர அரசாணைகள் மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் வரும் முன்னுரிமைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்

    அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் www.drbcud.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 14.11.2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....