சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார்.
சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த சத்தியா (20) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.
இதையும் படிங்க:தவறாக சித்தரிக்கப்படும் பாஜக தலைவர்களின் படங்கள்? யார் இந்த லோன் ஆப் நிறுவனம்…?
இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டதாக கூறப்படுகிறது. ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறை தீவிர விசாரணையில் தற்போது ஈடுபட்டு வருகிறது.
இந்த கொடுர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.