Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புரூ.40,000-த்தில் பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் வேலை; விண்ணப்பிக்க வாய்ப்பு..

    ரூ.40,000-த்தில் பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் வேலை; விண்ணப்பிக்க வாய்ப்பு..

    ஐசிஎஸ்ஐ (icsi) எனப்படும் இந்திய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    ஐசிஎஸ்ஐ – இந்திய பெருநிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில், காலியாக உள்ள 40 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்தப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.33,000 முதல் ரூ. 40,000 வரை நியமிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக, 1.12.2022 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடங்களுக்கு தகுதியாக, ஐசிஎஸ்ஐ-இல் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும், இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க http://icsi.in/recruitmentcrc என்ற இணையதளத்தை அனுக வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 30.12.2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    இலங்கை தொடருக்கு எதிரான இந்திய தொடர்; விராட் கோலிக்கு ஓய்வு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....