இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தோனேஷியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், நகரின் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அத்துடன் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வானது இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்தா வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#earthquake in #Cianjur of Indonesia.
5.6 magnitude Earthquake left 30 dead and over 300 injured.
Heartbreaking and Devestating visuals from #Indonesia
Pray for Cianjur people.— Shiba Khan (@ShibaKh48733268) November 21, 2022
மேலும், இதுவரையில் இந்த நிலநடுக்கத்தால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மீட்பு பணியினரும், பொதுமக்களும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
நிலநடுக்கம் சார்ந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், இந்தோனேஷியாவில் இதுவரையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் யானை பலி; தொடர் சிகிச்சைக்குப் பின்னும் நேர்ந்த சோகம்..