தில்லியில் இளம் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் அப்தப் அமீன் போனாலாவுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனான அப்தப் அமீன் பூனாவாலாவுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தில்லியில் லிவ்வின் வசித்து வந்தனர், திருமணம் செய்து கொள்ளுமாறு ஷ்ரத்தா தொந்தரவு செய்ததால், காதலன் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி தில்லியின் பல பகுதிகளில் வீசியுள்ளார்.
ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காதலன் அப்தப் அமீன் பூனாவாலா கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்தப் அமீன் பூனாவாலா முன்னுக்கு பின் முரணான வாக்கு மூலம் அளித்து வருவதால், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தச் சோதனையை நடத்த தில்லி சகோத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த உண்மை கண்டறியும் சோதனை தில்லி ரோகிணி பகுதியில் இருக்கும் மருத்துவர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் நடைபெறுகிறது. மேலும் இந்தச் சோதனையின் பொழுது தடயவியல் குழுவும் நேரில் இருப்பர்.
இதனிடையே, தில்லி மொஹாலி காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடைப் பகுதி, வெட்டப்பட்ட எலும்புகள் உள்ளிட்டவை ஷ்ரத்தாவின் மரபணுவுடன் ஒத்துபோகிறதா என்பதை கண்டறிய அவரின் தந்தையின் மரபணுடவுடன் சோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
தந்தையை கொலை செய்துவிட்டு காணவில்லை என நாடகமாடிய தாய், மகன்: காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி?