மனைவி ஒருவர் திருநங்கையுடன் காதல் வயப்பட்ட தன் கணவனின் ஆசைப்படி அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பஹிர் என்பவர். இவர் திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கையுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. சிறிது காலத்திலேயே இவரின் காதல் அவரின் மனைவிக்கு தெரியவந்தது.
பிறகு இதுபற்றி கணவர் தயக்கத்துடன் தனது மனைவியுடன் பேசி இருக்கிறார். ஆனால், மனைவியோ தன் கணவரின் காதலை புரிந்து கொண்டுள்ளார். அதேசமயம், இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளையும் இவரே முன் நின்று செய்துள்ளார்.
இதையும் படிங்க: புல்டோசரில் அவசர அவசரமாக மருத்துவமனை வந்த நபர்.. ஆம்புலன்ஸ் வராததால் ஏற்பட்ட அவலம்
திருமணமான பிறகு, ஒரே வீட்டில் மூவரும் குடும்பம் நடத்த பஹிரின் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், தங்களுக்கு சட்டத்தைப் பற்றிய கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வழி கேட்டது ஒரு குத்தம்மா? கிராம மக்களால் தாக்கப்பட்ட சாமியார்கள்